states

img

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் வரைபடத்தை வெளியிட கேரள முடிவு

திருவனந்தபுரம், டிச.21- சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்  தொடர்பாக, மக்கள் வசிக்கும் மையங் களை முற்றிலுமாக விலக்கிய வரை படத்தை கேரளா ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. எதிர்க்கட்சிகள் உட்பட தவறான புரிதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த வரைபடத்தை வெளியிட முதல்வர் தலைமையில் கூடிய உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பதற்றமான சூழல் குறித்து வனம், உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த வரைபடத்தைப் பற்றி ஏதேனும் கூடுதல் தகவல் அல்லது புகார்கள் இருந்தால், அவற்றைச் சமர்ப்பிக்கவும். பஞ்சாயத்து செயலா ளர்கள் மற்றும் வனத்துறைக்கு நேரடி யாகவும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிக்க ஜனவரி 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்ற தேதியை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்படும்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத துறைகள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அரசு நியமித்த நீதிபதி தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் தலை மையிலான குழுவின் பதவிக்காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட 87 ஊராட்சிகளின் தலைவர், செயலர், கிராம அலுவலர் கள், வட்டாட்சியர், வனத்துறை அலு வலர்கள் அடங்கிய ஆன்லைன் கூட்டம் புதனன்று காலை 10 மணிக்கு நடந்தது. உள்ளாட்சி, வருவாய்த்துறை, வனத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். கள ஆய்வு தொடர்பான விவரங்கள் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. கள அளவில் தகவல்களை  சரிபார்க்க ஊராட்சி அளவில் வரு வாய், வனம் மற்றும் உள்ளாட்சித் துறை  அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு நியமிக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கொண்ட குழு அமைத்து மக்களிடம் தகவல் சேகரிப்பது குறித்தும் பரி சீலிக்கப்படும். அமைச்சர்கள் கே.ராஜன், ஏ.கே.சசீந்திரன், ரோஷி அகஸ்டின், கே.என்.பாலகோபால், எம்.பி.ராஜேஷ், ஏ.ஜி. கே.கோபாலகிருஷ்ண குருப், தலை மைச் செயலர் வி.பி.ஜாய், கூடுதல் தலைமைச் செயலர்கள் வி.வேணு, சாரதா முரளிதரன், பிஸ்வநாத் சின்ஹா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.