ஆளுநர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால அளவிற்குள் ஒப்புதல் வழங்க குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல எதிர்க்கட்சிகளாலும் மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆளுநர்களுக்கு எதிரான விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒருங்கிணைந்த முயற்சி பாராட்டத்தக்கது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பினராயி விஜயன், நமது கூட்டாட்சி கொள்கைகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆளுநர்கள் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.