திருவனந்தபுரம் ஜன. 4- கேரள அமைச்சராக சஜி செரியனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் புத னன்று (ஜன.4) பதவிப் பிர மாணம் செய்து வைத்தார். ஏற்கனவே கேரள கலாச்சாரம், இளைஞர் நலன் மற்றம் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியன். இவர் மீது ஊட கங்கள் எழுப்பிய அரச மைப்பு சாசனம் தொடர்பான விவாதத்தை தொடர்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜி னாமா செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதி மன்றம் சஜி செரியனின் பேச்சு அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது அல்ல என்றும் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதில்லை எனவும் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சரவையில் சஜி செரியன் இணைக்கப்பட உள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் செவ்வாயன்று அறி வித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் புதன் மாலை 4 மணிக்கு நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் பத விப்பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் ஏ.என்.ஷம்ஷீர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.