states

img

கேரளா: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

கேரளாவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.  

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா நகரை சேர்ந்த பிரதாபன் (62) என்பவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீப்பிடித்தது. இச்சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

இந்த தீ விபத்தில் பிரதாபன்(62), அவரது மனைவி ஷெர்லி(53), மகன் அகில்(29),  மருமகள் அபிராமி(25), அபிராமியின் 8 மாத ஆண்குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த பிரதாபனின் மூத்த மகன் நிஹுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  

அதனைதொடர்ந்து இந்த தீ விபத்து தொடர்பாக திருவனந்தபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.