states

img

‘கேரளா ஸ்டோரி’ இந்தி திரைப்படம் வகுப்புவாத வெறுப்பு பிரச்சார ஆயுதம்

திருவனந்தபுரம், ஏப்.30- மதச்சார்பின்மையின் பூமியான கேரளா வை மதவெறி மையமாக சித்தரித்து ‘கேரளா  ஸ்டோரி’ இந்தி திரைப்படத்தின் மூலம் சங் பரி வாரம் பிரசாரத்தை மேற்கொள்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதுகுறித்த முதல்வரின் முகநூல் குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது: மத ரீதியான அணிதிரட்டல் மற்றும் கேரளா விற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும்  நோக்கத்தில் வேண்டுமென்றே தயாரிக்கப் பட்டதாக முதல் பார்வையிலேயே தோன்றும்  “கேரளா ஸ்டோரி” இந்தி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (சனியன்று) வெளியிடப் பட்டது. மதச்சார்பின்மையின் பூமியான கேர ளாவை மதவெறியின் மையமாக சித்தரித்து சங்பரிவார் பிரச்சாரத்தை இந்த படம் முன்னெ டுத்து வருகிறது என்பதே டிரெய்லரின் முன்ன றிவிப்பு. கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம்  அடைய சங் பரிவாரம் மேற்கொண்ட பல்வேறு  முயற்சிகளின் பின்னணியில்தான் பிரச்சாரப்  படங்களும் வருகின்றன. அவை முஸ்லீம் களை அந்நியப்படுத்துவதையும் கவனிக்க வேண்டும். “லவ் ஜிஹாத்” குற்றச்சாட்டுகளை உருவாக்குவது திட்டமிட்ட நடவடிக்கையின்  ஒரு பகுதியாகும், அவை புலனாய்வு அமைப்பு கள், நீதிமன்றங்கள் மற்றும் மத்திய உள்  துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள் ளன. அப்போது மத்திய உள்துறை இணை  அமைச்சராகவும், இன்னும் மத்திய அமைச்ச ராகவும் உள்ள ஜி. கிஷன் ரெட்டி, லவ் ஜிகாத்  என்று எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத் தில் பதிலளித்தார். மேலும் இப்படத்தில், கேரளாவை உல கத்தின் முன் அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆவலின் காரணமாகவே இந்தப் பொய்க்  குற்றச்சாட்டு முக்கியக் கதையாக முன்வைக்  கப்பட்டுள்ளது. கேரளாவில் மத நல்லிணக்க  சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதை களை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வரு கிறது.

மற்ற இடங்களில் நடக்கும் பரிவார் அரசி யல் கேரளாவில் வேலை செய்யாததால், போலிக் கதைகளின் மூலம் பிரிவினை அரசி யலை படத்தின் மூலம் பரப்ப முயற்சிக்கின்ற னர். எந்தவித உண்மையும் ஆதாரமும் இல்லா மல் இதுபோன்ற கட்டுக்கதைகளை சங்பரிவார்  பரப்பி வருகிறது. கேரளாவில் 32,000 பெண்கள் மதம் மாறி இஸ்லாமிய அரசில் உறுப்பினராகி விட்டனர் என்ற பொய்யை படத்தின் ட்ரைல ரில் பார்க்க முடிந்தது. இது போலிக் கதை  கும்பலின் பொய் தொழிற்சாலையின் தயா ரிப்பாகும். நாட்டில் பிரிவினையையும் மதவெறியை யும், திரைப்படத்தை பயன்படுத்தி ஏற் படுத்துபவர்களை கருத்து சுதந்திரம் என்ற  பிரிவின் கீழ் நியாயப் படுத்துவதும் சரியல்ல.  கருத்துச் சுதந்திரம் என்பது இந்த நாட்டை  வகுப்புவாத மாக்குவதற்கும், பொய்களைப்  பரப்புவதற்கும், மக்களைப் பிளவுபடுத்து வதற்குமான உரிமம் அல்ல. மலையாளிகள் வகுப்புவாத மற்றும் மதவாத இயக்கங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொய்ப் பிரச்சாரம் மூலம் சமூகத்தில் அமைதியின்மையை பரப்  பும் வகுப்புவாத முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக விரோத செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.