states

குஜராத்தில் பாஜகவின் சாதனை வெற்றிக்கு காரணமான ஆம் ஆத்மி கட்சி!

அகமதாபாத், டிச.10- குஜராத் சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக இதுவரை இல்லாத அள வில் 156 இடங்களில் வெற்றிபெற்று  ஆட்சியைத் தக்க வைத்துக் கொண் டுள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்  தஸ்தைக் கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.  குஜராத் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு 10 சத விகித இடங்களைப் பெற வேண்டும்.  அதாவது ஒருகட்சி குறைந்தது 18 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், 17 தொகுதி களிலேயே காங்கிரசால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதே காங்கிரஸ் கட்சிதான், குஜ ராத்தில் 1985 தேர்தலில் மாதவ் சிங்  சோலங்கி தலைமையில் 149 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதுநாள் வரையிலும், பாஜகவால் அதனை முறியடிக்க முடிய வில்லை. 2002 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்த லைச் சந்தித்தது. அப்போது, 127  இடங்களில்தான் பாஜக வென்றது. அதன் பிறகு 2007-இல் 117 இடங்கள், 2012-இல் 115 இடங்கள், 2017-இல் 99 இடங்கள் என்று பாஜக இடங்களை இழந்து கொண்டே வந்தது.  காங்கிரஸ் 51, 59, 61, 77 என கடந்த  நான்கு தேர்தல்களாக இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்தது.  ஆனால், நரேந்திர மோடி தலை மையில் கூட கிடைக்காத வெற்றி, 2022 தேர்தலில் பாஜக-வுக்கு கிடைத்  துள்ளது. 156 இடங்களை வாரிச் சுருட்டியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி  17 இடங்கள் என்ற அதலபாதா ளத்தில் விழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்ததற்கு பல்வேறு காரணங் கள் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி யின் போட்டியும், அது பிரித்த வாக்கு களும் பிரதான பங்கை வகித்திருப் பது புள்ளிவிவரங்கள் மூலம் தற் போது தெரியவந்துள்ளது.  குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கான சவுராஷ்டிரா, பழங்குடியினர் பகுதிகளில் ஆம்  ஆத்மி கட்சி பிரித்த வாக்குகள், காங்கிரசை படுகுழியில் தள்ளி, பாஜக-வை அமோக வெற்றிபெறச் செய்திருப்பது பட்டவர்த்தனமாகி உள்ளது.

சவுராஷ்டிரா பகுதியில்  மொத்  தம் 48 இடங்கள் உள்ளன. இவற்றில் கடந்த முறை 28 இடங்களை காங்கி ரஸ் கட்சி பெற்றிருந்தது. ஆனால், இந்தமுறை 48-க்கு 40 இடங்களை பாஜக தன்வசப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 3 இடங்க ளில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்  ளது. இந்தப் பகுதியில் ஆம் ஆத்மி  கட்சிக்கு, காங்கிரசை விட ஒரு இடம்  அதிகமாக 4 இடங்கள் கிடைத்துள் ளன. சமாஜ்வாதி வேட்பாளர் காந் தல் ஜடேஜா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். சவுராஷ்டிரா பகுதியில் பாஜக-வுக்கு 48.23 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில், காங்கி ரசுக்கு 26 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி  மட்டும் சுமார் 20 சதவிகித வாக்கு களைப் பிரித்துள்ளது. இது காங்கிர சுக்கு குழிதோண்டுவதாக மாறி விட்டது. இதே சவுராஷ்டிர பகுதி யில், 2017 தேர்தலில் காங்கிரசுக்கு 45.37 சதவிகித வாக்குகளும், பாஜக வுக்கு 44.90 சதவிகித வாக்குகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், குஜராத்தில் மொத்தமுள்ள 27 பழங்குடியினர் தொகுதிகளில் 23 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கி ரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி  கட்சி ஒரு தொகுதியிலும் வென்றுள்  ளது. ஆனால், இந்த 27 தொகுதி களில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. கடந்த முறை பட்டியல் பழங்குடியினருக்கான 40 தொகுதிகளில், 16 இடங்களை மட்டுமே பாஜக பெற்றிருந்தது. ஆனால், இந்தமுறை காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி கபளீகரம் செய்ததால், பாஜக வெற்றி பெற்றுள்  ளது.

2017 தேர்தலில், பாஜக வெற்றி  பெற்றாலும், அதன் பலத்தை 99 இடங்களுக்குள் சுருக்கியதற்கு, பட்டிதார் மற்றும் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் வாக்குகளை காங்கிரஸ் வளைத்ததே காரணமாக இருந்தது. ஆனால், 2022 தேர்தலில்,  ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்குர் உள்ளிட்டோரை காங்கிரசிலிருந்து தன்பக்கம் இழுத்த பாஜக அவர்கள் மூலமாக நல்ல அறுவடையைப் பார்த்துள்ளது. அத்துடன், ஆம்  ஆத்மி கட்சியின் உதவியும் பாஜக வை வெற்றிகரமாக கரையேற்றி யுள்ளது. மத்திய குஜராத் பகுதியில், 61-க்கு 56 இடங்களைப் பாஜக பிடித்  துள்ளது. 4 இடங்களில் மட்டுமே  காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றி ருக்கிறது. இந்த பகுதியில் ஆம் ஆத்மி கட்சி 8 தொகுதிகளில் இரண்  டாவது இடத்தில் வந்துள்ளது.  5 முறை பாஜக எம்எல்ஏவாக இருந்த மது ஸ்ரீவஸ்தவா சுயேச்சை யாக போட்டியிட்ட வகோடியா தொகுதியில் பாஜக வேட்பாளர்  அஷ்வின் படேல் தோற்றுப்போயி ருக்கிறார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா  வெற்றி பெற்றிருக்கிறார். அகமதா பாத், வதோதரா, நாடியத், உம்ரெத், மட்டார் நகர்ப்புறங்களிலும், பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்  டுமே வெற்றி பெற்றுள்ளது. 

வடக்கு குஜராத்தில் மொத்த முள்ள 32 இடங்களில் கடந்த 2017  தேர்தலில் காங்கிரசுக்கு 17 இடங்க ளும் பாஜக-வுக்கு 14 இடங்களும் கிடைத்தன. ஆனால், 2022 தேர்த லில் பாஜக பெற்ற இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள் ளது. காங்கிரசுக்கு 8 இடங்களும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்றுள்ளனர்.  தெற்கு குஜராத்தில் 35 இடங்க ளில் 33 இடங்களைப் பாஜக அள்ளி யிருக்கிறது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆனால் இங்கு ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிர சின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி  சிதைத்து இருக்கிறது.  சூரத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களையும் அப்படியே பாஜக வாரிச்சுருட்டி விட்டது. கட்ச் பகுதி யிலும் இதே கதைதான். 6 இடங்க ளையும் பாஜக அள்ளியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இருந்த 2 இடங்  களையும் இழந்துள்ளது. இந்தப் பகு தியில் ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாத போதும் காங்கிர சைத் தோற்கடித்துள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக, மாநிலம் முழுவதும் 5 இடங்க ளையே பெற்றாலும் சுமார் 40 லட்சம் வாக்குகளை பிரித்து, பாஜக-வை  சாதனை வெற்றிபெறச் செய்துள் ளது.