states

img

அரிய நிகழ்வு : பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

வழக்கமாக யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதுலும் அரிதானது. இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதிலும் அரிதானது. இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை சுற்றிவரும் காணொலி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

வனவிலங்குகள் நல ஆர்வலர்களும், விலங்குகள் ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இந்த அரிய நிகழ்வை கொண்டாடி வருகிறார்கள்.

யானையின் உருவம் மற்றும் கர்ப்பக் காலம் அதிகம் என்பதால், யானைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுப்பது என்பதை அரிதான நிகழ்வாகவே பார்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

இதற்கு முன்பு, இதுபோன்று 1980-களில் யானை இரட்டை குட்டிகள் போட்டதாக பதிவாகியிருப்பதாக சரணாலய அதிகாரிகள் கூறினர்.