கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு பைக்கம்படி என்ற பகுதியில் மீன் பதப்படுத்தும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று 80 பேர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 20 பணியாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைதொடர்ந்து திடீரென ஏற்பட்ட கசிவு காரணம் குறித்து மங்களூரு காவல் ஆணையாளர் என்.சசிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.