states

img

இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு

இமாச்சலப்பிரதேசத்தின் 15-வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்றார்.
இமாச்சலப்பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 75.6% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகின.  இதில் காங்கிரஸ், 40 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.  பாஜக 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், இமாச்சலப்பிரதேசத்தின் 15-வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவியேற்றனர். 
சிம்லாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.