ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவை தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளை (தெலுங்கு தேசம் - 135, ஜன சேனா - 21, பாஜக - 8) கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தையும் இழந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு செவ்வாயன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பதவியேற்றார். மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.