states

img

ட்ரோன்கள் இயக்கப்படுவதை தடுக்க பட்டம் விடும் விவசாயிகள்!

பஞ்சாப்-அரியானா எல்லையில் ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுவதை தடுக்க விவசாயிகள் பட்டம் விட்டு வருகின்றனர். 
'தில்லி சலோ’ போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுத்து நிறுத்த, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற பகுதியில் அரியானா காவல்துறை ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. 
இந்த நிலையில் ட்ரோன்கள் இயக்கப்படுவதைத் தடுக்க  விவசாயிகள் பட்டம் விட்டு வருகின்றனர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை விவசாயிகள் வைத்திருக்கின்றனர்.