science

img

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சக்தி வாய்ந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து!

இந்திய விஞ்ஞானிகள், சக்தி வாய்ந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

பாக்டீரியம் பாசிலஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஆந்த்ராக்ஸ் நோய் பரவுகிறது. குதிரை, ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குகள் அதிக அளவில், இந்த நோய் கிருமியால் பாதிக்கப்படுகின்றன. மனிதர்கள், நாய்கள் மற்றும் பன்றிகளில் இந்த பாக்டீரியாவின் வித்துகள் அதிக அளவில் இருந்தால் மட்டும் இதனால் பாதிப்பு ஏற்படும். இந்த பாக்டீரியாவின் வித்துகள், பல ஆண்டுகளுக்கு மண்ணில் செயலற்று இருக்கும். ஆனால், அதற்கு சாதகமான சூழலில், இந்த பாக்டீரியாவின் வித்துகள் செயல்பட்டு, விலங்குகள் நோய் தொற்று ஏற்படுகின்றன. விலங்குகளின் உடலில் இந்த கிருமி பெருகி, அதன் நச்சுத்தன்மையால் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்க்கான தடுப்பு  மருந்துகள், பாக்டீரியாக்கள் முழுமையாக பெருகி நச்சுத்தன்மையை வெளியிடும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது. ஆனால், இந்த மருந்துகள் பாக்டீரியாவின் வித்துகளை எதிர்த்து செயல்படுவதில்லை.

இந்நிலையில், டிஆர்டிஎல் (DRDL - Defence Research and Development Laboratory) மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பாக்டீரியாவின் நச்சுத்தன்மை மற்றும் வித்துகள் ஆகிய இரண்டிற்கு எதிர்ப்பு தன்மை அளிக்கும் வகையில், சகதி வாய்ந்த தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 
 

;