science

img

இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் 4 மடங்காக அதிகரிக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி 

அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை இரு தவணைகளாக அடுத்தடுத்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரிப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 
ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் அஜர் பைஜான் நாட்டில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த ஆய்வில் 100 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  முதலில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. அதன்பின், 57வது நாட்களில், 85 விழுக்காட்டினருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 

;