science

img

நிலவில் நிலநடுகம் ஏற்பட்டதால் சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளது - நாசா தகவல்!!

நிலவின் உட்பகுதி அதிக குளிர்ச்சி அடைவதால் அதின் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்படுவதாகவும் நாசா அறிவித்திருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய அப்பல்லோ 11, அப்பல்லோ 12, அப்பல்லோ 14, அப்பல்லோ 15 மற்றும் அப்பல்லோ 16 ஆகிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் அப்பல்லோ 11 மட்டும் மூன்று வாரங்களில் செயலிழந்துவிட்டது. மற்ற செயற்கைக்கோள்கள் மூலம் கிடைத்துள்ள படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நிலவில் சுருக்கங்கள் ஏற்படுவதை கண்டுள்ளனர். 

நாசாவின் செயற்கைக்கோள்கள் இதுவரை அனுப்பியுள்ள 3,500 க்கு மேற்பட்ட படங்களில் நிலாவின் நிலப்பரப்பு மேற்பகுதியில் மடிப்பு மடிப்பாக சுருக்கங்கள் இருப்பதைக் காண முடிகிறது. இவை நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்களால் ஏற்பட்டவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். 

நிலப்பரப்பின் உட்பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு குளிர்ச்சி அதிகமாகி வருகிறது. இதனால் நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதோடு மேல்பகுதியில் மடிப்பு போன்ற அமைப்பு ஏற்படுகிறது. நிலவின் மேல் பகுதி உறுதியாக இருப்பதால் அதில் விரிசல்கள் ஏற்படுகின்றன. ஒரு பகுதி தாழ்ந்து அதன் அருகிலேயே மற்றொரு பகுதி உயர்கிறது. 

நிலவு சீராக குளிர்வடைந்து வருவதால் சுருக்கம் அடைந்துவருகிறது என்பதற்கு முதல் ஆதாரம் இந்த ஆய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வான் வெளி அருங்காட்சியகத்தின் மூத்த விஞ்ஞானி தாமஸ் வாட்டர் கூறுகிறார். 

நிலவில் ஏற்பட்டிருக்கும் சில நிலநடுக்கங்கள் வலுவானவை என்று, அவை 5 ரிக்டர் வரை இருக்கக்கூடும் என்றும், நிலவின் மேற்பரப்பில் உருவாகும் இந்த மடிப்புகள் சிறிய படிக்கட்டுகள் போல இருக்கின்றன எனவும், அவை 10 மீட்டர்கள் மூதல் பல கிலோ மீட்டர்கள் வரை நீள்கின்றன எனவும் என்றும் வாட்டர் குறிப்பிடுகிறார்.


;