சென்னை, ஏப்.23-
பூமி தினத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வேலம்மாள் வித்யாலயா மேல் அயனபாக்கம் இணைப்பு பள்ளியில் "காலநிலை நடவடிக்கை" என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் இயக்கக் கொண்டாட்டம் ஏப்ரல் 22 அன்று நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் கிட்டத்தட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளும் முற்றிலும் மூடியிருந்த போதிலும், அன்னை பூமியைப் பாதுகாப்பதில் தங்களை நிலை நிறுத்து வதற்கு மாணவர்கள் அனைவரும் இணையத்தால் இணைக்கப்பட்டனர். அழகியல் விளைவுகள் கொண்ட வரைபடங்கள்? மூலம் மாணவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப் படுத்தினர்.
மேலும், ரைடு சைக்கிள்கள் மூலம் புகை பழக்க வழக்கங்களைக் குறைத்தல், அதனால் புதிய காற்றைச் சுவாசித்தல், தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் வீடுக ளில் உள்ள குளுகுளு பெட்டிகளை அணைத்தல், சின்னஞ்சிறு குழந்தைகள் பெரியவர்களின் ஆசீர்வாதங்களை வாங்க முயல்தல், இயற்கை அளிக்கும் கொடைகளுக்கு நாம் திருப்பிச் செலுத்தும் பரிசாக இவைகளை உணர் தல் போன்றனவற்றுக்காக இந்தத் தருணத்தை நல்லதொரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
வீட்டில் தனிமைப்படுத்தப் பட்ட நிலையிலிருந்த போதும், பூமி மீதும் நாட்டின் மீதும், மக்கள் மீதும் நல்லுணர்வு கொண்ட மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதாகும்.