science

img

நாளை வானில் ஒரு அதியசம்

சென்னை, ஏப்.6- வானில் பல அதிசயங்கள் அடிக்கடி  நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் 8ஆம் தேதி வானில் பிங்க் நிலவு தோன்றவுள்ளது.

இதற்கு முட்டை நிலவு என்ற பெயரும்  உள்ளது. இந்தியாவில் அன்று காலை 8.05 மணிக்கு இந்த நிலவு தோன்றும். ஆனால் நம்மால் இங்கு காணமுடியாது. அதே சமயம் இரவு நேரமாக இருக்கும் நாடுகளில் இந்த நிலவை பார்க்கலாம். பொதுவாக நிலவு பூமியிலிருந்து 3,84,400 கி.மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் இந்த நிகழ்வின் போதும், 3,56,907  கி.மீட்டர் வரை நெருங்கி வரவுள்ளது. இதனால் வெளிச்சமாகவும், அளவில் பெரியதாகும் அது தோன்றும்.

;