science

img

கோவிட்-19: பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன்கள் -

கரோனா சிகிச்சையில் ஏற்பட்டுள்ள ஒளிபாய்ச்சும் புதிய நம்பிக்கை


கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து சிகிச்சை மூலம் மீண்டு வருபவர்களிடமிருந்து பிளாஸ்மாவை எடுத்து கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு நல்ல பலன்கள் தெரிவதாக ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

கரோனாவுக்கு உலகம் முழுதும் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சம் பேர்களாகவும் பலியானோர் எண்ணிக்கை 25,000த்தை நெருங்குவதாலும் எந்த ஒரு சாத்தியமாகக் கூடிய சிகிச்சை முறையும் அது பற்றிய செய்தியும், ஆய்வும் ஊக்கமளிப்பதாகவே அமைகிறது.

convalescent plasma என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் உடலிலிருந்து பிளாஸ்மா எனப்படும் குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவத்தை எடுத்து தீவிரமாகப் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்றி சிகிச்சை அளிக்கும் ஒரு முறையாகும்.

இதுவரை தீவிர வைரஸ் தொற்றுள்ள 5 நபருக்கு மட்டுமே பரிசோதனை அடிப்படையில் இந்த சிகிச்சை முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது, இதன் முடிவுகள் பெரிய அளவில் நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதாக மருத்துவ, ஆய்வு நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.. அமெரிக்க இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையை எழுதியவர்கள் சீன விஞ்ஞானிகளான செங்குவாங் ஷென், ஷாவோக்வின் வாங், ஃபாங் ஸாவோ, ஆகியோர்களாவார்கள்.

இந்தக் கட்டுரையில் இவர்கள் கோவிட்-19 மற்றும் தீவிர மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் 5 பேருக்கு பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை அளித்ததில் முதற்கட்ட ஆய்வு முடிவுகளின் படி கோவிட்-19 தீவிர நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் என்ற பெரிய நம்பிக்கை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 
 

;