science

img

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை - இஸ்ரோ தலைவர்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ”பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஏதும் இதுவரை இல்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. 

வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளோம். 75-வது ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.


;