science

img

செவ்வாய்கிரகத்தில் உப்பு ஏரிகள்

ஆய்வில் தகவல்


வாஷிங்டன்,அக்.19- செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரி கள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஜியோ சைன்ஸ் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை யில் கூறியிருப்பதாவது:

செவ்வாய்கிரகத்தில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட்டர் பள்ளத் தில் உள்ள இருந்த ஏரி, 95 மைல் அகல முள்ள ஒரு பிரம்மாண்டமான பாறைப் படுகை, இது 2012 முதல் நாசா கியூரியா சிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வரு கிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது. செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்துள்ளன. அவை பூமியில் இருந்ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. கிரகத்தின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய் இருக்கிறது. செவ்வாய் கிர கத்தின் வளிமண்டலம் மெல்லியதாக மாறிய தால் செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் நிலைத்தி ருக்காமல் ஆவியாகியுள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இணை ஆசிரியர் மரியன் நாச்சன் கூறுகையில், கேல் க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறி குறிகளை வெளிப்படுத்துகிறது. இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ்வின் முக்கிய அங்கமாகும், வறண்ட காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின. இந்த ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல்வது கடினம். ஆனால் கேல் க்ரேட்ட ரில் உள்ள ஏரி நூற்றுக்கணக்கான ஆண்டு கள் முதல் பல்லாயிரக்கணக்கான ஆண்டு கள் வரை இருந்துள்ளன என்றார்.

;