science

img

செவ்வாய் கிரகத்தின் காந்த புலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தின் காந்த புலம், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இன்சைட் ரோவரை செவ்வாய் கிரகத்தின் தரையிறக்கியது. இந்த ரோவர், கடந்த ஒரு ஆண்டு, 6 மாதங்களாக செவ்வாய் கிரகத்தின் சூழல் அமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றது. 

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் காந்த புலம், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது செவ்வாய் கிரகத்தில், புதிய கோணத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 

;