science

img

”சந்திரன் எங்கிருந்து வந்தது” - இஸ்ரோவின் டுவீட்

’சந்திரன் எங்கிருந்து வந்தது’ மற்றும் பல குழப்பங்களுக்கான பதிலை சந்திராயன் 2 வெளிப்படுத்தும் என்று இஸ்ரோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சந்திராயன்-2  விண்கலம் வரும் ஜூலை 15-ஆம் தேதி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3,290 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம்  சந்திரனின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், சந்திரன் எங்கிருந்து வந்தது என்றும், சந்திரன் தோற்றம் குறித்து விவாதத்தில் இருக்கும் நான்கு கோட்பாடுகளை இஸ்ரோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. 

பிளவு கோட்பாடு: பூமியின் சுழற்சி வேகம் காரணமாக  சந்திரன் பூமியில் பிளவுபட்டு  பிரிய காரணமாக அமைந்தது. அதே நேரத்தில் அதன் ஈர்ப்பு விசையானது இந்த பகுதியை நங்கூரமிட்டு நமது இயற்கை செயற்கைக்கோள்  மாறியது.

ராட்சத தாக்க கருதுகோள்: பூமிக்கும் மற்றொரு வான் பொருளுக்கும்,  இடையிலான மோதலின் போது  கிரகத்தின் ஒரு பகுதி உடைந்து சந்திரனாக மாறியது.

பிடிப்பு கோட்பாடு: பறக்கும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு சந்திரன் ஒரு இணைக்கப்படாத பொருளாக இருந்தது.

இணை கூட்டல் கோட்பாடு: ஒரு ஒற்றை துளை வாயு ஒரு கருந்துளையைச் சுற்றும் போது சந்திரனையும் பூமியையும் உருவாக்கியது.

மேலும், இந்த நான்கு கோட்பாடுகளில் எது சரியானது அல்லது ஐந்தாவது மாற்று  கோட்பாடு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி. இதற்கான பதிலை சந்திராயன் 2 வெளிப்படுத்தும் என்று இஸ்ரோ பதிவிட்டுள்ளது. 

;