science

img

செவ்வாய் கிரகத்தில் கடுகு செடி - செக் விஞ்ஞானியின் ஆய்வு

செவ்வாய் கிரகத்தின் நிகழும் தட்பவெப்ப நிலையில் கடுகு செடி உள்ளிட்ட தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வு ஒன்றை செக் நாட்டின் விஞ்ஞானி ஒருவர் நடத்தி வருகிறார்.

செக்’ நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஜன் லுகாசெவிக்(29) என்பவர் இதற்கான ஆய்வை பூமியில் மேற்கொண்டார். பராகுவே பல்கலைக்கழக வாழ்வியல் அறிவியல் துறையின் குழுவினரும் இவருடன் சேர்ந்து ஆய்வு நடத்தினர். செவ்வாய் கிரகத்தின் நிகழும் தட்பவெப்ப நிலையில் மண் இன்றி குறைந்த அளவு தண்ணீரில் தாவரங்களை வளர்த்தனர். இந்த ஆய்வில், கடுகு, சாலட் இலைகள், முள்ளங்கி மற்றும் சமையலுக்கு உதவும் வாசனை செடிகள், புதினா போன்ற மருத்துவக்குணம் நிறைந்த தாவரங்களை பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்த நிலையில், அவர்கள் பயிரிட்ட தாவரங்களில் இருந்து கடந்த வாரம் அறுவடை செய்துள்ளார்.
 

;