நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதன் வாயிலாக அங்கு சென்றடைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவில் தங்கள் லேண்டரை தரையிறக்க முடிந்த உலகின் உயர் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அவ்வாறு செய்துள்ள நான்காவது நாடு இந்தியா. முன்னதாக அமெரிக்கா, சோசலிச சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிச சீனா ஆகிய நாடுகள் நிலவின் மேற்பரப்பில் தங்கள் லேண்டர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி உள்ளது. அதிலும் குறிப்பாக ‘சந்திரயான்-3’ திட்ட விஞ்ஞானிகள் முக்கியப்பங்கு வகித்தனர்.
பி. வீரமுத்துவேல் திட்ட இயக்குநர், சந்திரயான்-
இவரின் தந்தை ஒரு ரயில்வே ஊழி யர். இஸ்ரோவின் பல்வேறு மையங்களுடன் சந்திரயான் 3 திட்டத்தின் ஒருங்கிணைப்பு பணியை அவர் கையாண்டார். 2019 இல் அவர் இந்த பணிக்கு பொறுப்பேற்றார். ‘மூன் மிஷன்’ தொடங்குவதற்கு முன்பு வீரமுத்துவேல், இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்தார். சந்திரயான்-2 திட்டத்தில் வீரமுத்துவேல் முக்கியப் பங்கு வகித்தார். நாசாவுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்களிப்பை வழங்கினார். தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், சென்னை ஐஐடியில் பட்டம் பெற்றவர். வீரமுத்துவேல், லேண்டரின் நிபுணர். விக்ரம் லேண்டரை வடிவமைப்பதில் அவர் முக்கியப்பங்கு வகித்துள்ளார்.
கே.கல்பனா, துணை திட்ட இயக்குநர், சந்திரயான்-3
சந்திரயான்-3 குழுவிற்கு கல்பனா துணை திட்ட இயக்குந ராகப் பணியற்றினார். கொரோனா தொற்றுநோய் காலத்தின் போதும் கூட மன உறுதி யுடன் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்த மிஷனின் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். இந்தியா வின் செயற்கைக்கோள் திட்டத்தில் இந்த அர்ப்பணிப்பு மிக்க பொறியாளருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. சந்தி ரயான்-2 மற்றும் மங்கள்யான் திட்டத்திலும் கல்பனா முக்கியப்பங்கு வகித்தார்.
எம். சங்கரன் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர்
எம்.சங்கரன், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் தலைவராக உள்ளார். இஸ்ரோவுக்காக இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களையும் தயாரிக்கும் பொறுப்பு அவரது குழுவுக்கு உள்ளது. சந்திரயான்-1, மங்கள்யான் மற்றும் சந்திரயான்-2 செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியிலும் சங்கரனின் முக்கிய பங்களிப்பு உள்ளது. சந்திரயான்-3 செயற்கைக்கோளின் வெப்பநிலை சமநிலையில் இருப்பதை உறுதி செய்வது சங்கரனின் பொறுப்பாக இருந்தது. செயற்கைக்கோளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை சோதிப்பது முழு செயல்முறையின் மிக முக்கியமான ஒரு பகுதி யாகும். நிலவின் மேற்பரப்பின் ’மாதிரியை’ உருவாக்க அவர் உதவினார். அதில் லேண்டரின் இறங்கும் திறன் சோதிக்கப்பட்டது.
எஸ். சோம்நாத், இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் லட்சிய நிலவுப் பயணத்தின் பின்னணியில் எஸ். சோம்நாத்தின் முக்கியப் பங்கு இருக்கிறது. ககன்யான் மற்றும் சூரிய ஆய்வுத் திட்டம் ஆதித்யா-எல்-1 உள்ளிட்ட இஸ்ரோவின் மற்ற விண்வெளிப் பயணங்களுக்கு வேகம் அளித்த பெருமை யும் இவருக்கு உண்டு. எஸ். சோம்நாத் இஸ்ரோவின் தலைவர் பொறுப்பை ஏற்கும் முன் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார். திரவ உந்து அமைப்பு மையம், முக்கியமாக இஸ்ரோவிற்கான ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது. “சந்திர யான்-3 தனது துல்லியமான சுற்றுப்பாதையை அடைந்து, நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. வாகனம் நன்றாக இருக்கிறது,” என்று சந்திரயான் 3 விண்வெளியில் ஏவப்பட்டபோது சோம்நாத் கூறினார். ”சந்திரயான் -2 தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். இன்று நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.” என்று புதன்கிழமை சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு எஸ். சோம்நாத் குறிப்பிட்டார். “சூரிய ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படக்கூடும்,” என்றும் அவர் கூறினார்.
மோகன் குமார், மிஷன் இயக்குநர்
எஸ். மோகன் குமார், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத் தின் மூத்த விஞ்ஞானி. அவர் சந்திர யான்-3 திட்டத்தின் மிஷன் இயக்குநராக உள்ளார். மோகன் குமார், NVM3-M3 திட்டத்தின் கீழ் ‘ஒன் வெப் இந்தியா 2’ செயற்கைக்கோளை வணிக ரீதியாக வெற்றிகரமாக ஏவுவதிலும் இயக்குநராக பணியாற்றி யுள்ளார். “எல்எம்3-எம்04, இஸ்ரோவின் கனரக லிப்ட் வாகனம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இஸ்ரோ குடும்பம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதற்கு வாழ்த்துகள்,” என்று மோகன் குமார் கூறினார்.
எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இயக்குநர்
எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் கேரளாவின் திருவனந்த புரத்தில் உள்ள தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராவார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியின் முக்கிய நடவடிக்கைகளுக்கு அவரும் அவரது குழுவும் பொறுப்பேற்ற னர். லாஞ்ச் வெஹிக்கிள் மாக்-III என்று மறுபெயரிடப்பட்ட, ஜியோ சின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (ஜிஎஸ்எல்வி) மாக்-III யும் (புவி ஒத்திசைவு செயற்கைகோள் செலுத்து வாகனம்) விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் தயாரிக்கப்பட்டது. தகவல் தொடர்பு, வழிகாட்டல், ரிமோட் சென்சிங், வானிலை ஆய்வு மற்றும் பிற கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இஸ்ரோவுக்கான அனைத்து செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற்பார்வையிடும் மையத்தின் தலைவராக 2021 ஜூன் மாதம் அவர் பொறுப்பேற்றார்.
ஏ.ராஜராஜன், ராக்கெட் செலுத்து வாரியத்தின் தலைவர்
ஏ. ராஜராஜன், ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மனித விண்வெளி பணித் திட்டம் - ககன்யான் மற்றும் SSLV இன் மோட்டார் தொடர்பாக அவர் பணிபுரிகிறார். ராக்கெட் செலுத்து அனுமதி வழங்கும் அமைப்பு, ராக்கெட் செலுத்துதலுக்கு பச்சைக் கொடி காண்பிக்கிறது. இவர்கள் தவிர சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றினர் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.