science

img

ஆன்லைன் பாடத்தை கண்காணிக்க வலியுறுத்தல்

சென்னை, ஏப்.17- பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இதனை கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோரையும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. அதேவேளை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்க  ளுக்கு தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யிடப்படவில்லை.

தற்போது அரசு தேர்வுகள் எழுதவுள்ள மாணவ, மாணவி களுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால்  பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்கள் தேவை எதிர்கொள் வது சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர்க்க தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்க ளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறை தொடங்கி உள்ளது.

பெரும்பாலான பள்ளிகள் சார்பில் பிரத்யேக செயலி (ஆப்) உருவாக்கப்பட்டு அதன் வழியே ஆசிரியர்கள், மாண வர்கள் சந்தித்து கலந்துரையாடுகின்றனர். செல்போன், லேப்டாப் உதவிகொண்டு இந்த கலந்துரையாடல் நீடிக்கிறது. மேலும் வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு அதன் வழியே மாண வர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டு, விடைகள் எழுதும்  மாணவர்களை கண்காணித்து விடைத் தாளை வாட்ஸ்- அப் மூலம் அனுப்பி வைக்கும் பொறுப்பு பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.

;