politics

img

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர்

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஞாயிறன்று (ஏப்.14) தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து, அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி பாசிச பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதை உறுதிசெய்வோம் என சூளுரைத்தனர். மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுகமாநகர் மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;