politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

விவசாயிகள் போராட்டம் ஒரு மாநிலத்தில்தான் நடக்கிறது என்ற மோடி அரசாங்கத்தின் பொய்யை சுக்கு நூறாக உடைக்கும் விதத்தில்இந்தியா முழுதும் லட்சக்கணக்கான விவசாயிகள் 12 முதல் 3 மணி வரைசாலைகளை முடக்கி சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் பெரிய தேசியநெடுஞ்சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

                                                                       ******************

காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் அப்சல்அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இமயத்தில் செங்கொடி உயர பறக்க வைப்பதற்கு வாழ்த்துக்கள். ஜம்மு-காஷ்மீரில் சவால்கள் மிகுந்த இந்த தருணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமக்களுக்கு ஆதரவாக தனது பொறுப்புகளை செம்மையாக செயல்படுத்த மிகுந்த உறுதியுடன் உள்ளது.

                                                                       ******************

உத்தர்கண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை உடைந்து பனிச்சரிவு ஏற்பட்டதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது அதிர்ச்சி தருகிறது. பலியான மக்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு உடனடியாக முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை, அந்த மாநிலத்திற்கு வழங்கிட வேண்டும். பேரழிவு தடுப்பு நடவடிக்கைகளையும் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;