politics

img

7 ஆண்டுகளில் 12 கோடி பேர் வேலையிழப்பு... இந்திய இளைஞர்களுக்கு மூன்று நாமம் போட்டவர் மோடி.....

பெங்களூரு:
பெங்களூருவிலுள்ள பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர் நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உரையாற்றியுள் ளார்.அப்போது, “பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதியளித்தார். அதன்படி கடந்த 7ஆண்டுகளில் 14 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால்அதற்கு மாறாக இந்த காலக்கட்டத்தில் 12 கோடி வேலைகள் பறிபோய் உள்ளன” என்று சித்தராமையா கூறியுள்ளார். “மோடி மோடி என்றுகோஷம் போடும் இளைஞர் களுக்கு, பிரதமர் மோடிமூன்று நாமம் போட்டுள்ளார்” என்று சாடியுள்ளார்.

கர்நாடகத்தில் எடியூரப்பா மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக்கப்பட்டு இருப்பதை ஏமாற்று நாடகம் என்று விமர்சித்துள்ள அவர், “ ஆர்.டி.ஜி.எஸ். மூலம் யாராவது லஞ்சம் வாங்கினார்கள் என்றால், அது எடியூரப்பாதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.“எடியூரப்பாவுக்கு நேரடியாக அரசியல் செய்ய தெரியாது. பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வருவது, ஆபரேசன் தாமரை மூலம் எம்எல்ஏக்களை இழுத்து முதல்வர்ஆவதுதான் எடியூரப்பாவுக்கு தெரிந்த விஷயம். தற்போது பசவராஜ் பொம்மையையும் எடியூரப்பா-தான் முதல்வர் ஆக்கியுள்ளார். அதனால் எடியூரப்பாவின் “ரப்பர்ஸ்டாம்ப்” ஆகத் தான் பசவராஜ் பொம்மை செயல்படுவார்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

;