பிரதமர் மோடி :- மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் சிறை.
ச.சா - இல்லேனா, பாஜவுல சேந்துரணும்...!!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- பொதுமக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கிறபோது பயன்பாடு அதிகரிக்கும்.
ச.சா - அதச்செய்யாம, பெரு நிறுவனங்களப் பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களே..?!?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- இன்று வரையில் ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் கட்சி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆகும்.
ச.சா - பாஜக உங்க கூட்டணில இல்லையா..?!?
பாஜக தலைவர் அமித்ஷா :- இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்.
ச.சா - கோல்வால்கரும், சாவர்க்கரும்தான் விடுதலை வாங்கித் தந்தாங்கனு எழுதுவாங்களோ..?!?