டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான ஜாக் டோர்சியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான ட்விட்டரின் சிஇஒ-வான ஜேக் டோர்சியின் டிவிட்டர் பக்கத்தில் திடீரென இனவெறி கருத்துகளும், ஹிட்லரின் நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துகளும் பதிவிடப்பட்டன. மேலும், “ஹிட்லர் வாழ்க” எனவும், டிவிட்டர் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு உள்ளதாகவும் சில டிவிட்டுகள் பதிவிடப்பட்டன. சுமார் 15 நிமிடங்களுக்கு இவ்வாறான தகவல்களை #Chuckling Squad என்ற ஹேஷ்டேகுடன் அந்த கணக்கில் பதிவிடப்பட்டு வந்துள்ளனர். இது பல லட்சக்கணக்கான டிவிட்டர் பயனாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் அவரது கணக்கில் இருந்து அந்த டிவிட்டுகள் நீக்கப்பட்டன.
இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது. டிவிட்டர் சிஇஓ-வின் கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ட்விட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் எனக் டிவிட்டர் பயனாளர்கள் அந்நிறுவனத்தை கடுமையாக கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, தங்களது பாதுகாப்பு அமைப்பில் எந்தவித பிரச்சனை இல்லை எனவும், டிவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண் மூலமாக அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.