பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் நிறுவனம் கண்காணிப்பதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ப்ரவுசர், கூகுள் ப்ரவுசர். இது பாதுகாப்பானது என்ற காரணத்தாலே மக்கள் இந்த ப்ரவுசரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது கூகுளின் ”இன்காக்னிடோ மோட்” பயன்படுத்தப்படும் போது உரிமையை மீறி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், செல்போன் அல்லது கணினி மூலம் கூகுள் ப்ரவுசரை பயன்படுத்தும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்கு இழப்பீடாக 5 பில்லியன் டாலர் (ரூ.37,500 கோடி) கூகுள் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.