ஹைதராபாத்,ஜூன் 21- தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங், போலீசார் தன்னை கல்லால் அடித்ததாகக் கூறி, அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஹைத்ராபாத் காவல்துறை ஆணையர் தன் டிவிட்டரில், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் ராஜா சிங் தன்னைத் தானே தாக்கியது தெளிவாக பதிவாகியுள்ளது.