நாட்டின் பாதுகாப்பு காரணமாக ”வி டிரான்ஸ்பர்” இணையதளத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாமை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த “வி டிரான்ஸ்பர்” இணைய சேவை கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 20 ஜி.பி வரையிலான கோப்புகளை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் அனுப்ப முடியும். உலகளவில் பல லட்சம் பேர் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். கோவிட்-19 காலத்தில், வீடுகளில் இருந்து பணிபுரியும் பலர், “வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு காரணமாக ”வி டிரான்ஸ்பர்” இணையதளத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள இணையதள சேவை நிறுவனங்களுக்கு, கடந்த 18-ஆம் தேதி அனுப்பப்பட்ட உத்தரவில், “வி டிரான்ஸ்பர்” உள்ளிட்ட சில இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.