இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர் களில் ஒருவரான அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பா னியின் சகோதரர் (தம்பி) ஆவார். அதாவது திரு பாய் அம்பானியின் இரண்டாவது மகன். அனில் அம்பானி ஏடிஏ (ADA) குரூப் மூலம் ரிலை யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில், அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் திருடப் பட்டு கடன் அளிக்கும் வியாபாரம் பார்க்கப் பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட கடன்கள் திருப்பி செலுத்தப்படாத காரணத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. அதாவது மொத்தம் ரூ.9,812.9 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.9,812.9 கோடி யார் யாருக்கு கடனாக கொடுக்கப்பட்டது? எதற்காக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
கடன்கள் தள்ளுபடியால் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸில் முதலீடு செய்தவர் களும், பங்கு முதலீட்டாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்ச் 2018இல் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்கு விலை 59.60 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 2020இல் இதன் விலை வெறும் 0.75பைசாவாக குறைந்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத் தில் முதலீடு செய்துள்ள 9 லட்சம் முதலீட்டா ளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திடீர் நடவடிக்கை
அனில் அம்பானி தலைமையிலான ரிலை யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் முறை கேடாக நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என 2018ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் 2020இல் நீதிமன்றம் வரை சென்றது. அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அனில் அம்பானியின் ஊழல் முறைகேடு விவகாரம் குழிதோண்டி புதைக்கப் பட்டது போல சத்தமில்லாமல் இருந்தது.
இந்நிலையில், திடீரென சமீபத்தில் அனில் அம்பானியின் முறைகேடு விவகாரம் தொடர்பாக “செபி (SEBI - Securities and Exchange Board of India)” அமைப்பு விசாரணை நடத்தியதாகவும், இதுதொடர்பாக 222 பக்க குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாவும் தகவல் வெளியானது.
தொடர்ந்து வெள்ளியன்று அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் முறை கேடு தொடர்பாக செபி அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. அதில்,”ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறை கேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதை அடுத்து அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டு களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் அனில் அம்பானி இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கக் கூடாது. அதே போல் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கும் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, அந்நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என செபியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி பிரச்சனையை திசை திருப்ப?
பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், “பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி இந்திய அளவிலும், உலகளவிலும் பங்குச்சந்தை முதலீடுகளில் மிகப்பெரும் முறைகேடுகளை அரங்கேற்றி யுள்ளார்” என தனது முதல் அறிக்கையில் குற்றம் சாட்டியது. தொடர்ந்து,”எங்களது அறிக்கை தொடர்பாக அதானி மீது நடவடிக்கை எடுக்கா மல், காப்பாற்றும் நோக்கில் செபி தலைவர் மாதவி புச், அதானியுடன் இணைந்து செயல் பட்டார். வெளிநாட்டில் அதானியின் பங்குகளை வாங்கிக் குவித்தார்” என ஹிண்டன்பர்க் நிறு வனம் தனது இரண்டாவது அறிக்கையில் போட்டுடைத்தது.
அதானி குழுமத்துடன் செபி தலைவர் மாதவி புச்சிற்கு தொடர்பு இருப்பதாக ஹிண்டன் பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, செபி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும், இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாக வலி யுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அதானி - செபி தொடர்பு விவ காரத்தை மூடி மறைக்கவே அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுத்து திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தன்னுடைய பணியை திறம்பட செய்வது போன்றும், யாருக்கும் நெருக்க மாக இல்லை என்பது போன்றும் காட்டிக் கொள்ளவே செபி அனில் அம்பானி அறிக்கை யை திடீரென வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
அனில் அம்பானி விவகாரத்தை செபி விசாரிப்பதே இன்று தான் தெரியும்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் முறைகேடாக நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என 2018ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டு எழுந்தது. அனில் அம்பானி திவால் ஆனார். அவருடைய நிறுவனங்கள், பங்குகள் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோர் வாங்கினார்கள், தில்லி நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்றது என பல்வேறு தகவல் வெளியாகின. மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தும் 2018 முதல் 2020 வரை வலம் வந்தவை. அதன்பிறகு அனில் அம்பானி ‘தலைமறைவானார்.’ அதே போல அவரது முறைகேடு வழக்கும் ‘தலைமறைவானது.’ அனில் அம்பானி முறைகேடு விவகாரத்தை செபி விசாரிப்பதே, அந்நிறு வனம் வெள்ளியன்று வழங்கிய தீர்ப்புக்கு பின்னரே தெரியும் என்பது தான் வேடிக்கையான விஷயமாக உள்ளது.