india

img

தலித் மக்களின் போராட்ட இடத்திற்குச் செல்லும் சிவசேனா

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22- ஆம் தேதி பிரதிஷ்டையுடன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த  விழாவிற்கு நாடு முழுவதும் உள்ள அர சியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா  பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிவ சேனா (யுடிபி) கட்சிக்கு ராமர் கோவில் அறக்கட்டளை இன்னும் அழைப்பு விடுக்  கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டா லும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்கு செல்வ தில்லை என சிவசேனா (யுடிபி) அதிரடி யாக அறிவித்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பதிலடியாக தலித் மக்க ளின் போரட்ட விழாவை கையிலெடுத்துள்  ளது சிவசேனா (யுடிபி).  

இதுதொடர்பாக  சிவசேனா (யுடிபி)  தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா  நாளன்று (ஜனவரி 22) மாலை 6.30 மணிக்கு  டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், சமூக சீர்திருத்தவாதி சனே குருஜி ஆகியோர் போராட்டங்கள் நடத்திய இடமான கலா ராம் (மகாராஷ்டிர மாநிலம்) கோவிலுக்  குச் செல்ல நானும், எனது தொண்டர்களும் பூஜை கொண்டாட்டம் செல்ல முடிவு செய்  துள்ளோம்” எனக் கூறினார்.

கடந்த 1930-ஆம் ஆண்டில் பட்டியல்  சமூக மக்கள் கோவில் நுழைவு அனுமதி  கோரி அம்பேத்கர் தலைமையில் கலாராம்  கோவில் முன்பு பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. அதனை நினைவு கூர்ந்தும், அதே போராட்டக்களத்தில் நாங்  கள் ராமர் கோவில் திறப்பு விழா நாளில் தனி கொண்டாட்ட நிகழ்வு இருப்பதாக சிவசேனா (யுடிபி) அறிவித்து இருப்பது மகாராஷ்டிராவில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.