india

img

செப்டம்பரில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி?

புனே:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)- தேசிய நுண்கிருமி நிறுவனத்தின் (என்ஐவி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம்  கூறியதாவது:

வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பெறும் நாடுகளிடையே தடுப்பூசியில் அதிக அளவில் இடைவெளி ஏற்படும் என்ற காரணத்தால் இந்த முயற்சிகளை கைவிடுமாறு உலகசுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள் ளது. எனினும், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும்.இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களில் செலுத்தப்படும் சோதனைகள் நடைபெறுகின்றன. தேசிய நுண்கிருமி நிறுவனத்தில் இது போன்ற மாதிரிகளை நாங்கள் பரிசோதித்ததில் இவ்வாறு வெவ்வேறுதடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதைகண்டறிந்தோம். அவர்களுக்கு எந்தவிதமான தீவிர பாதிப்பும் தென்படவில்லை. அவர்களது நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஓரளவு சிறப்பாகவேஇருந்தது. எனவே இவ்வாறு செலுத்து
வதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில நாட்களில் இது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிப்போம்.2-18 வயது வரையிலான குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை 2 மற்றும் மூன்றாம் கட்ட நிலைகளில் உள்ளது. வெகுவிரைவில் அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும். அவ்வாறு கிடைக்கப்பெறும் முடிவுகள், கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்ப்பிக்கப்படும். செப்டம்பர் மாத வாக்கில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படக் கூடும். 

;