india

img

மகாராஷ்டிராவில் ஏப்.23 முதல் பொதுத் தேர்வுகள்

மும்பை, ஜன.21-

மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் தொடங்கும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறக்கப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் தொடங்கும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
அதபடி, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 23 முதல் மே 29 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 31 வரையிலும் நடைபெறும்.
அதற்குமுன்,12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 22 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 9 முதல் 28 வரையிலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

;