பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வன் கொடுமை வழக்கில் தண்டிக் கப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலை யில், இந்த விவகாரம் தொடர்பாக பில் கிஸ் பானுவிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”பில்கிஸ் பானு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை நான் வர வேற்கிறேன்.
அமித் ஷா தலைமையி லான ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜூலை 11, 2022 அன்று பில்கிஸ் பானு வை பாலியல் பலாத்காரம் செய்த குற்ற வாளிகளை கடிதம் மூலம் முன்கூட்டியே விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது ஏன்? பிரதமரின் நாரி சக்தியின் (பெண் கள் சக்தி) முழக்கம் ஒரு வெற்று கூற்று மட்டுமே, அடிப்படை உண்மைகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறி யுள்ளார்.