india

பாஜக-விடமிருந்து இந்திய நாட்டை மீட்டெடுப்போம்!

புதுதில்லி, பிப். 17 - தில்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் தலை மையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றுள்ளது. தில்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிக ளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக  தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாக வும், அதன்மூலம் தில்லி அரசை கவிழ்க்க வாய்ப்புள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.  மேலும், தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார்.

இதை யடுத்து, தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு சந்தித்தது. இதில், தில்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மி  கட்சியின் 62 எம்எல்ஏ-க்களில் 54 பேர் வாக்கெ டுப்பில் பங்கேற்று அரசுக்கு ஆதரவாக வாக்க ளித்தனர். இதன்மூலம் ஆம் ஆத்மி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குத லைச் சந்திக்கிறது.

நீங்கள் என்னைக் கைது செய்யலாம். ஆனால், கெஜ்ரிவாலின் சிந்தனைக ளை எப்படி முடிவுக்கு கொண்டு வருவீர்கள்? இந்தப் பேரவையில் எங்களுக்கு பெரும் பான்மை உள்ளது என்றாலும், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையாய் இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், 2029-ம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாட்டை பாஜகவிடமிருந்து விடுவிக்கும். ‘21 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் கட்சியில் இருந்து விலக ஒப்புக்கொண்டுள்ளனர். பலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்.

அவர்கள் எம்எல்ஏக்களுக்கு பாஜகவில் இணைவதற்காக ரூ.25 கோடி வழங்குவதாக தெரிவித்தனர்’ என்று எங்கள் எம்எல்ஏகளிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த பேரத்தை எங்கள் எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று என்னிடம் தெரி வித்தனர். மற்ற எம்எல்ஏ-க்களிடம் நாங்கள் பேசும்போது ‘பாஜகவினர் 21 பேரிடம் பேச வில்லை, 7 பேரிடம் மட்டுமே பேசினர்’ என்று தெரியவந்தது.

பாஜகவினர் மற்றொரு ஆபரே ஷன் தாமரை நடத்த முயற்சி மேற்கொண்டனர். இந்தப் பின்னணியிலேயே நம்பிக்கை வாக்கெ டுப்புக்கு முன்வந்தேன்” என்று கெஜ்ரிவால் பேசினார். 62 எம்எல்ஏ-க்களில் 54 மட்டுமே அவைக்கு வந்திருந்த நிலையில், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. இரண்டு எம்எல்ஏ-க்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சில ருக்கு உடல்நிலை சரியில்லை, சிலர் வெளியூரில் உள்ளனர்” என்றார்.