தர்மேந்திர பிரதான் பதவியேற்ற போது நீட்டுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் முழக்கம்
பதவியேற்பு நாளிலேயே, தமிழக எம்.பி.க்கள், ‘நீட்’ ஊழல்- முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்றத் தில் கிளப்பி மோடி அரசை அதிர்ச்சியடைச் செய்தனர்.
ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தான் எம்.பி.யாக பதவியேற்றுக் கொள்ள தனது இருக்கையிலிருந்து எழுந்து சபாநாயகர் மேடையை நோக்கிச் செல்லும் வரை, தமிழக எம்.பி.க்கள் ‘நீட்... நீட்... நீட்’ என்று முழக்கங்களை எழுப்பினர். இதில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர். இதனால் நீட்டிற்கு எதி ரான அமளிக்கு இடையிலேயே கல்வியமைச்சர் தர் மேந்திர பிரதான் பதவியேற்க வேண்டியதாயிற்று.
எதிர்ப்பால் தலை குனிந்தபடியே பதவியேற்ற பிரதமர் மோடி
குடியரசுத் தலைவர் மூலம் இடைக்கால சபாநாய கராக பர்த்ருஹரி மஹதாப் மக்களவைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், காலை 11 மணிக்கு புதிய எம்.பி.க்களைப் பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதில், பிரதமர் மோடி முதல் நப ராக வந்து பதவியேற்றுக் கொண் டார். அவரைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், கிரண் ரிஜிஜூ, நிதின் கட்காரி, மான்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அவர் களுக்கு இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகி யோர் அரசியல் சாசனத்தை உயர்த்திக் காண்பித்தும், அரசியல் சாசனம் மீறப்படுவதை அனுமதிக்க மாட் டோம் என்று ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் முழக் கங்களை எழுப்பினர். இதனால் முகம் இருண்டு போன பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் பக்கம் திரும்பாமல் தலைக்குனிந்தபடியே எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
கடமை, செயல்பாடு, கருணை: பிரதமர் மோடி அளப்பு
மக்களவைக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தங்களின் பயணத்தில் அனைவரையும் ஒருங் கிணைத்து செல்லவே விரும்புவதாகவும், பொறுப் புள்ள எதிர்க்கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், எமது ஆட்சி கடமை, செயல்பாடு, கருணையுடன் இருக்கும் எனக் கூறினார்.
மேலும், “நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜன நாயகத்தின் மாண்பையும், நாட்டின் சாமானிய குடி மக்களின் எதிர்பார்ப்புகளையும் எதிர்க்கட்சிகள் நிறை வேற்றும் என நம்புகிறேன்” என்று பழிகள் அனைத்தை யும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தும் முயற்சியில் இறங்கி னார்.