india

img

பணப்பயன்களை நிறுத்த மாட்டோம்!

“நலவாரிய உறுப்பினர்கள் தரவுகள் அழிந்து போனாலும், பணப்பலன்களை நிறுத்த மாட்டோம்; தகவல்கள் படிப்படியாக சேகரித்து சேர்க்கப்படும்” என்று நலவாரிய அதிகாரிகள் சிஐடியு தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.

தமிழ்நாடு தொழிலாளர் துறை யின் கீழ் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 30 லட்சம் பேரும், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் என 17 நலவாரியங்களின் கீழ்,  மொத்தம் 33 லட்சம் பேர் உறுப்பி னர்களாக உள்ளனர். இந்த நல வாரியங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதியமும் பெற்று வருகின்றனர். கல்வி, திருமணம், மகப்பேறு  உதவி கேட்டும், ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரண  நிதி, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட  பணப்பயன்களை கோரியும், புதிய  பதிவு, புதுப்பித்தல், திருத்தம் உள்  ளிட்ட பதிவுகளுக்காகவும் சுமார் 5 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வாரிய உறுப்பி னர்கள் 70 லட்சம் பேரின் தரவு களும், ஆவணங்களும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை  கண்டித்து சிஐடியு சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் செவ்வாயன்று (ஜன.30) சென்னை யில் உள்ள தொழிலாளர் ஆணை யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நலவாரிய ஆன்லைன் பதிவு கள் காணாமல் போனது எப்படி? இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என விசாரணை நடத்த வேண்டும்.

தவறு செய்த அதி காரிகள் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். பணப்  பலன்களை வழங்க காலதாமதம் செய்யக் கூடாது என போராட்டத் தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு வடசென்னை மாவட் டத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.  கண்ணன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம். தயாளன்  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  இதனைத் தொடர்ந்து தொழி லாளர் துறை அதிகாரிகளை சந் தித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன், தென்  சென்னை மாவட்டத் தலைவர்  இ.பொன்முடி, மாவட்டச் செயலா ளர்கள் பா. பாலகிருஷ்ணன் (தென்  சென்னை), சி. திருவேட்டை (மத்திய சென்னை), சு. லெனின்  சுந்தர் (வடசென்னை) உள் ளிட்டோர் பேசினர். பின்னர் தொழிலாளர்களி டையே பேசிய ஜி. சுகுமாரன், “ஓய்வூதியம் பெறுவோருக்கு அது தொடர்ந்து வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை உள்ளிட்ட  பணப்பயன் கோரும் விண்ணப்  பங்களில், ஒப்புதல் கொடுத்துள்  ளவர்களுக்கு வந்துவிடும். தரவு கள் இல்லாத விண்ணப்பதாரர் களுக்கு குறுஞ்செய்தி மற்றும் குரல் செய்தி அனுப்பி, ஆவ ணங்களை பெற்று பணப்பயன்கள் தரப்படும். புதிதாக ஓய்வூதியம் கோருபவர்கள் தேவையான ஆவணங்களை தர வேண்டும். உறுப்பினர் புதுப்பித்தலுக்கு கால அவகாசம் தரப்படும் என்று  அதிகாரிகள் உறுதி அளித்துள்ள னர். இது ஒருபுறம் இருந்தாலும், தகவல்கள் காணாமல் போனது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு  விசாரணைக் குழு அமைத்து, அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்றார்.