india

img

விவசாயத்தை அடகு வைக்கும் கார்ப்பரேட் பட்ஜெட்

விவசாயத்தில் அறுவடை சமயத்தில் தேவைப்படும் அனைத்து வேலை களுக்கும் தனியார் மற்றும் பொது முதலீடு களை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியிருப்பது என்பது, மீண்டும் 3 வேளாண் சட்டங்களையும் கொண்டுவருவதற்கான முயற்சியாகும்.

 இதனைத் தடுத்து நிறுத்திடவேண்டும். ஒட்டுமொத்தத்தில் இடைக்கால பட்ஜெட், மீண்டும் 3 கறுப்பு வேளாண் சட்டங்களையும் கொல்லைப்புற வழியாகக் கொண்டு வரும் முயற்சியாகும். சம்யுக்த கிசான்  மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) இதனைக் கடுமையாக எதிர்த்திடும்.

இதனை  அமல்படுத்த மக்கள் ஒருபோதும் அனு மதிக்கமாட்டார்கள். நாடு சுதந்திரம் பெற்றபின், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், சுயசார்பு தன்மைக்கும் உதவிய வேளாண் கொள்கை யை மீண்டும் அந்நிய மற்றும் இந்திய ஏக போக மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் சீர்குலைக்க வேளாண்மை துறையை அனுமதித்திடக் கூடாது.

நவீன தாராளமயப் பொருளாதார கொள்கை, வேலை வாய்ப்புக்கும், ஒட்டுமொத்தத்தில் மக்களின் வளர்ச்சிக்கும் மிகவும் ஆபத்தான தாகும் என்று கடந்த முப்பதாண்டு கால அனு பவங்கள் மெய்ப்பித்திருக்கின்றன.

இப்போது மோடி அரசாங்கம் இந்த பட்ஜெட்டின் மூலம் விவசாயத்தில் அறுவடை சமயத்தில் தேவைப்படும் பணிகளைச் செய்வதற்காக கார்ப்பரேட் ஏகபோக நிறு வனங்களை அனுமதித்திருப்பதை எக்கார ணம் கொண்டும் அனுமதித்திடக்கூடாது, இதனை முற்றிலுமாக முறியடித்தாக வேண்டும்.  

மோடி அரசை தண்டிப்போம்
2024 ஜனவரி 16 அன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்திய சிறப்பு மாநாடு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சி குறித்து ஒரு மாற்றுக் கொள்கையை பிரகடனம் செய்திருக்கிறது. அந்தப் பிரகடனம் வரு மாறு: விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மிகவும் மோசமாக்கியுள்ள கொள்கைகளை அமல்படுத்தியுள்ள, விவசாய விரோத ஒன்றிய அரசாங்கத்தை, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயி களுக்கு விரோதமாகச் செயல்படும் ஒன்றிய அரசாங்கத்தைத் தண்டித்திட சூளுரைத்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யார்மயப்படுத்திடவும், தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியதும், வேலையின்மை அச்சுறுத் தலை அதிகமாக்கியது, வறுமையை அதி கப்படுத்தியது மற்றும் பெரும்பான்மை மக்க ளின் வாழ்க்கையை ஆழமான வறுமைக் குழிக்குள் தள்ளியது. இந்தியாவில் விவசாய நெருக்கடி நீடித்து வருவதற்கு இவை காரணமாகும்.

“கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களின் பிடியிலிருந்து வேளாண்மைத்துறை விடு விக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கும் விதத்தில் விவசாயத்துறை மாற்றப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு கண்ணிய மான வாழ்க்கை மற்றும் சமூகத்திற்கான ஊதியம் கிடைக்க வேண்டும்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஓய்வூதியம் அளிக்கப்பட  வேண்டும்” என ஜலந்தர் மாநாடு வலி யுறுத்தியுள்ளது. அந்த தீர்மானத்தின்படி, விவசாயிகளை யும், விவசாயத்தையும் பாதுகாத்திட, வரலாறு படைத்திட்ட  வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் தொடங்க   வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.