அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 3,4 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் வயநாடு நிவாரண உதவி நிதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முதற்கட்டமாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜூ கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் மற்றும் முன்னாள் சபாநாயகர் விஜயகுமார், இ.பி. ஜெயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.