மேற்குவங்க மாநிலம் கொல் கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கே மருத்துவமனையில், முது நிலை 2ஆம் ஆண்டு மருத்துவம் பயின்ற மாணவி பாலியல் வன்கொலை செய் யப்பட்டார். இந்த சம் பவத்தை தொடர்ந்து தடயங்களை அழிக் கும் நோக்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மருத்துவமனை யில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆர்.ஜி.கே மருத்துவமனை யின் அவசர சிகிச்சை பிரிவு சுக்குநூறாக நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, ஆர்.ஜி.கே மருத்துவமனைக்கு சிஐ எஸ்எப் பாதுகாப்பு அளிக்க உத்தர விட்டது.
இந்நிலையில், ஆர்.ஜி.கே மருத்துவ மனையில் தாக்குதல் நடத்திய விவகா ரத்தில் மருத்துவமனை பாதுகாப்பு பணி யில் இருந்த 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள் ளது. ஆகஸ்ட் 15 அன்று மருத்துவ மாண வர்களை போன்று திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் குண்டர்கள் ஆர்.ஜி.கே மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி னர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீசாரும், குண்டர்களை தடுக்காமல் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பர்மா கம்பெனி யில் பாய்லர் வெடித்து 18 ஊழியர்கள் படு காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 18 பேரும் அனகாபள்ளி மாவட்ட மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துராண்ட் கால்பந்து கோப்பை போட்டிகளை கொல்கத்தாவில் மீண்டும் நடத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அகில இந்திய கால் பந்து சம்மேளன கூட்டமைப்பு தலைவர் கல்யாண் சவுபே கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கை யில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என வாக்கு றுதி தரப்பட்டுள்ளது. அதே போல மற்றொரு அர சியல் கட்சியான அப்னி கட்சி,”தாங்கள் ஆட்சியில் இடம் பெற்றால் 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்துள்ளது.