india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மெகபூபா முப்தியும், அவரது பாது காப்பு காவலர்களும் எந்த காயமும் இன்றி தப்பி னர். அவரது கார் ஓட்டுநர் மட்டும் காலில் காயத்து டன் மீட்கபட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வியாழனன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள்2% உயர்ந்து  ரூ.2700-க்கு மேல் எகிறியது. இந்த புதிய சாதனை யின் மூலமாக ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. 

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஜன வரி மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்  பட்ட அதிகாரப்பூர்வ வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து சேவைகளும் இனி ஒரே இணை யத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வியாழனன்று 6.1 ரிக்டர்  அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்  தின் எதிரொலியாக தில்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

ஹரியானா: நூஹ்வில் மீண்டும் வன்முறை தூண்ட விஎச்பி திட்டம்?

ஹரியானா நூஹ் பகுதி வன்முறையின் முக்கிய குற்றவாளியான பிட்டு  பஜ்ரங்கியின் சகோதரர் மகேஷ் பஞ்சால் மர்ம நபர்கள் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில் வியாழனன்று உயிரிழந்தார். உறவி னர்கள் மற்றும் தீவிர இந்துத்துவா அமைப்பான விஎச்பி, பஜ்ரங் தள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால்,  நூஹ் பகுதியில் வன்முறை பதற்றம் ஏற்  பட்டுள்ளது. ஹரியானாவின் நூஹ் பகுதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஎச்பி, பஜ்ரங் தள் அரங்கேற்றிய வன்முறையில் 8-க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்பால்
4 பேர் மாயம்: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூர் கடந்த 9 மாதங்  களாக பற்றி எரிந்து வருகிறது.  அங்கு வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது. பல லட்சம் மக்கள் சொந்த ஊரிலேயே  அகதிகளாக உள்ளனர். கடந்த சில வாரங்  களாக அங்கு வன்முறை லேசான அள வில் குறைந்தது. இந்நிலையில் டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து மீண்டும் வன்  முறை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து  மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி யுள்ளது. இந்நிலையில், புதனன்று கும்பி  பகுதியில் 4 பேர் காணாமல் போன சம்ப வம் தொடர்பாக பிஷ்ணுபூர் மாவட்டத்  தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு  தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள் ளது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் மேலும் அதிகரித்துள்ளது. காணா மல் போனதாக கூறப்படும் 4 பேரும்  கும்பியில் விறகு சேகரிக்கச் சென்ற  பொழுது நபர்களால் கடத்தி கொல்லப் பட்டதாக வெளியான தகவலால் பிஷ்ணு பூர் மாவட்டத்தில் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.

மும்பை
மகாராஷ்டிரா சபாநாயகரின் தீர்ப்பு முன்பே எழுதப்பட்ட திரைக்கதை

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவின் சட்டமன்ற உறுப்  பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்களை சபாநாய கர் ராகுல் நார்வேகர் நிராகரித்தும், ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா என்றும் புத னன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை  எதிர்த்து சிவசேனா (உத்தவ்) உச்சநீதி மன்றம் செல்லவுள்ள நிலையில், மகா ராஷ்டிரா சபாநாயகரின் தீர்ப்பு முன்பே எழுதப்பட்ட நாடக திரைக்கதை என முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மாநி லங்களவை உறுப்பினருமான கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ்  பக்கத்தில் கூறுகையில்,”ஷிண்டே அணி  தான் உண்மையான சிவசேனா என சபா நாயகர் தீர்ப்பளித்துள்ளார். இந்த நாட கத்துக்கான கதை நீண்ட காலத்துக்கு முன்பே எழுதப்பட்டது. எந்த தடையு மின்றி கேலிக்கூத்து நிகழ்வதை நாம் பார்க்கிறோம். இது ஜனநாயக தாய்க்கு நேர்ந்த துயரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.