india

img

முதுபெரும் தலைவர் - மேற்குவங்க முன்னாள் முதல்வர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!

புதுதில்லி, ஆக. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழனன்று (ஆகஸ்ட் 8) காலை 8.20 மணியளவில் கொல் கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 80.

தோழர் புத்ததேவ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளது.

மாணவர் இயக்கத்திலிருந்து..

தோழர் புத்ததேவ் பட்டாச்சார் யா 1966-இல் மாணவராக இருந்தபோது கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்கள் பலவற்றில் அவர் பங்கெடுத்தார். 1968இல் மேற்கு வங்க ஜனநாயக இளை ஞர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். 1971-இல் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-இல் மாநில செயற்குழு உறுப் பினரானார். இந்த காலக்கட்டத் தில் புத்ததேவ் கட்சியின் அர்ப் பணிப்புமிக்க முன்னணி ஊழிய ராக பணியாற்றினார். கட்சி  அளித்த பல்வேறு பொறுப்பு களையும் மேற்கொண்டு கட்சி யின் முக்கியத் தலைவராக உயர்ந் தார்.

தோழர் புத்ததேவ் பட்டாச்சார் யா, 1985-இல் நடைபெற்ற கட்சி யின் 12-ஆவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000-இல் அரசியல் தலைமைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2015-வரையிலும் அரசி யல் தலைமைக்குழு உறுப்பின ராக இருந்து, கட்சிக் கொள்கை களை வடிவமைப்பதில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திட்டார்.

தனித்துவமிக்க பங்களிப்பு

தோழர் புத்ததேவின் தனித்துவமிக்க பங்களிப்பு என்னவெனில், அவர் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத் தில் சுமார் முப்பது ஆண்டுகள் அமைச்சராகவும், முதலமைச்ச ராகவும் திறம்பட செயல்பட்ட தாகும். 2000-நவம்பரில் அவர் தோழர் ஜோதிபாசுவுக்குப் பின் முதலமைச்சரானார். அதன்பின் னர் இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். இவ்வாறு அவர் இடது முன்னணி அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் கொள்கைகளை வடிவ மைப்பதில் மிகமுக்கியமான பங்கினை ஆற்றினார்.   

சிறந்த எழுத்தாளர்

தோழர் புத்ததேவ் பட்டாச் சார்யா, கலாச்சார நிறுவனங் களை வளர்த்தெடுப்பதிலும், முற் போக்கு கலாச்சார விழுமியங் களை நிலைநிறுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு களைச் செய்துள்ளார்.

தோழர் புத்ததேவிற்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கவிஞர், நாடக ஆசிரி யர் மற்றும் எழுத்தாளர். பல சர்வதேச இலக்கியப் படைப்பு களை வங்க மொழியில் மொழி பெயர்த்துள்ளார். அவர் சீனா வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இவை தொடர்பான ஒரு புத்த கத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

தோழர் புத்ததேவ், முத லமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னரும் கூட,  அர்ப் பணிப்புமிக்க ஒரு கம்யூனிஸ்ட் டாக, வெறும் இரண்டு அறைகள் மட்டும் கொண்ட ஒரு அபார்ட் மெண்டில் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.

தோழர் புத்ததேவ் அவர் களின் மறைவுடன் மேற்குவங்க கம்யூனிச மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஓர் அத்தியாயம் முடிந்திருக்கிறது.

தோழர் புத்ததேவின் நினை விற்கு அரசியல் தலைமைக்குழு தன் புரட்சிகர அஞ்சலியைச் செலுத்திக்கொள்வதுடன், தன்  ஆழ்ந்த இரங்கல்களை அவரு டைய மனைவி மீரா மற்றும் அவரது மகன் சுசேதனுக்கும் தெரி வித்துக் கொள்கிறது.   (ந.நி.)

தோழருக்கு செவ்வணக்கம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 

தனது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவு கூரப்படும். ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவ சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும், விளிம்பு நிலை மக்களின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழருக்கு செவ்வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.