பிலாஸ்பூர்- நாக்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பிலாஸ்பூர் - நாக்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை 50 சதவிகிதம் மட்டுமே முன்பதிவானதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2,045-ம், கார் சேர் வகுப்பு கட்டணமாக ரூ.1,075-ம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் பயணிகளின் வரவேற்பு குறைந்துள்ளது.
பிலாஸ்பூர்- நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயிலுக்கு பதில் இனி தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.