india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கணிக்க முடியாத அளவிற்கு அதீத அளவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எந்த நேரத்தில் எந்த விகிதத்தில் கனமழை பெய்யும் என அளவீடு எதுவும் வெளியிட முடியாத அளவில் கனமழை பெய்யலாம் என்பதால் மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“திருப்பதி செல்லும் பக்தர்கள் கோவில், தேவஸ்தா னத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

“உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருப்பதி ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும்” என்று செயல் அதிகாரியிடம் பாஜக வினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதி கரித்து வரும் நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள், கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

“பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் என்னை கண்டு பயப்படுகின்றனர். அரசியல் ரீதியாக புனையப்பட்ட வழக்கை கண்டு எனக்கு பயமில்லை’’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஓநாய் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், பாஜக அரசின் நடவடிக்கை திருப்தி யளிக்கவில்லை எனக் கூறி அம்மாநில மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக்குழு இணையதளப் பக்கங்களை கண்காணித்து வருகிறது. மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சில இணையதளங்கள் வெளியிடுவது தெரியவந்துள்ள நிலையில், ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிடும் பல்வேறு இணையதள பக்கங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

“எம்எஸ்பி-யின் (MSP) விரிவாக்கம் என்ன என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா?” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.

புதுதில்லி
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்?

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி  வேதவியாசாச்சார் ஸ்ரீஷா னந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியை (கோரிபால்யா - பெங்களூரு) பாகிஸ்தான் என குறிப்பிட்டார். நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் கருத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் கிளம்பிய நிலை யில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு,”முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தால், அந்த பகுதியை பாகிஸ்தான் என்று கூறுவீர்களா?. இந்தி யாவின் பகுதிகளை பாகிஸ்தான் என்று கூறுவது அரசியல் சட்டத்தின் படி அடிப்படையிலேயே தவறானது. பாலின - வகுப்புவாத சார்பு கருத்துக்கள் கூறு வதை நிறுத்த வேண்டும்” என கண்ட னம் தெரிவித்தது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடை பெற்று வருவதாகவும், உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு இதுகுறித்து விரை வில் இறுதி முடிவை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுதில்லி
குரங்கு அம்மை வைரஸ் மாநிலங்களுக்கு  ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

குரங்கு அம்மை வைரஸ் இந்தியா விலும் லேசான அளவில் பரவ தொடங்கியுள்ள நிலையில், நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப் பட்டவர்கள் விரைவாக தனிமைப் படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயார் நிலையில்  இருக்க ஒன்றிய  அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலை யாக உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று இரண்டாவது முறை யாக அறிவித்துள்ளது. 2002இல் ஏற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு “கிளாட் 2” வகையைச் சார்ந்தது. அப்போது முதல் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. தற் போது வெளிப்பட்டிருப்பது “கிளாட் 1” வகை குரங்கு அம்மை ஆகும். “கிளாட் 1 பி” வகை குரங்கு அம்மை தொற்று  பதிவாகி உள்ள ஆப்பிரிக்க கண்டத்தைச் சாராத 3ஆவது நாடு இந்தியா ஆகும். “கிளாட் 1” வைரஸ் தொற்று “கிளாட் 2”  தொற்றைவிட தீவிரமானது ஆகும். இத னால் அனைத்து மாநிலங்களும், யூனி யன் பிரதேசங்களும் சுகாதார நிலையங் களில் பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பிட வேண்டும்” என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.