india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நீரியல் ஆய்வாளர்கள் அமெரிக்காவின் 3 முன் னணி நிறுவனங்களின் 1 லிட்டர் தண்ணீர் அடைக்கப்பட்ட 25 பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். ஆய்வின் முடிவில் ஒவ்வொரு பாட்டிலிலும் சுமார் 1,10,000 முதல் 3,70,000 வரையிலான நானோ பிளாஸ்டிக் துகள்கள் அடையாளம் காணப்பட்டன. அதாவது சராசரியாக 2,40,000 நானோ துகள்கள் இருப்ப தாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ளதால் ஒன்றிய அமைப்புகள் “இந்தியா” கூட்டணிக்  கட்சிகள் மீதான தாக்குதலை அதிகரித்துள்ள நிலை யில், ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள மூத்த தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும்  அவரது மகள் மிசா பாரதி  பெயரில் முதல் குற்றப்பத்திரிகையை அமலாக் கத்துறை செவ்வாயன்று தாக்கல் செய்தது.

“நீங்கள் உயர் பொறுப்பில் (முதல்வராக) இல்லாதபோது போஸ்டர், பதாகைகளில் கூட உங்களின் படம் கழுதையின் தலையிலிருந்த கொம்புகள் போல காணாமல் போய்விடும்” என முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் பாஜகவை சீண்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அதி காரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க அமலாக்கத்துறையின் செயல் இயக்குநர் ராகுல் நவீன் கொல்கத்தா சென்றுள்ளார்.

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் தில்லியை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் இருவர் உயிரி ழந்தனர்.

“மியூசிக் மேஸ்ட்ரோ” என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாலிவுட் பாடகரும், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞருமான உஸ்தாத் ரஷித் கான் (55) செவ்வாயன்று கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜனவரி 14- ஆம் தேதி மணிப்பூரில் இருந்து மீண்டும்  “இந்திய ஒற்றுமை யாத்திரை” தொடங்க உள்ள நிலையில், இந்த யாத்திரைக்கு மணிப்பூர் பாஜக  அரசு அனுமதி தரவில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.  

கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையில் இருந்து முதல் முறையாக  கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார்.

மனஅழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக இந்தியாவில் இதயநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலை யில், கடந்த 2022இல் ஏற்பட்ட திடீர் மரணங்களில் 57 சதவீதம் மாரடைப்பு காரணமாக நிகழ்ந்தது என  தகவல் வெளியாகியுள்ளது.