ஒரே நாளில் இரண்டு இடங்களில் ரயில் விபத்து
விசாகப்பட்டினத்தில் தீப்பிடித்து
எரிந்த விரைவு ரயில்
ரயிலை தனியார்மயமாக்க மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதன் முதல்படியாக ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை வசதியை கூட சரி யாக மேற்கொள்ள முடியாமல் ரயில்வே துறை நிதியின்றி திண்டாடி வருகிறது. நிதி ஒதுக்கீடு குறைவு, ஊழியர் பற்றாக் குறை காரணமாக நாடு முழுவதும் வாரத் திற்கு இரண்டு அல்லது மூன்று ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், மோடி ஆட்சியின் முக்கிய சாத னையாக ஒரே இரண்டு இடங்களில் அடுத்தடுத்து ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
ஆந்திரா
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கோர்பா – விசாகா விரைவு ரயிலின் பி 6, பி 7, எம் 1 ஆகிய பெட்டிகள் திடீரென தீப் பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறை யினர் துரித செயல்பட்டு தீயை அணைத்த தால், விரைவு ரயிலின் மற்ற பெட்டி களுக்கு தீ பரவாமலும், அருகில் உள்ள ரயில்களுக்கு பரவாமலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ரயில் விபத்தில் சிலருக்கு லேசான அளவில் காயம் ஏற் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.
உ.பி.,
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹா ரன்பூர் அருகே தில்லி – சஹாரன்பூர் இடை யேயான மெயின்லைன் எலக்ட்ரிக் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட் டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரி கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களும்... கனமழை எச்சரிக்கையும்.
வட மற்றும் கிழக்கு மாநிலங்களில் கன மழை தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத் துள்ளது.
ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்
ராஜஸ்தானில் கணிக்க முடியாத அள விற்கு கனமழை தீவிரமடைந்துள்ளது. கோட்டா, ஜலாவர், பரான் மாவட்டங்களில் அதீத அளவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த 3 மாவட்டங்களுடன் மேலும் 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழைக் கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வெப்ப மண்டல பிரதேசமான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல்முறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
4 மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், மத்தி யப்பிரதேசம், குஜராத் ஆகிய 4 மாநிலங்க ளுக்கு மிதமான கனமழைக்கான ஆரஞ்சு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல மேகவெடிப்பால் உருக்குலைந்துள்ள இமாச்ச லப்பிரதேச மாநிலத்திற்கு லேசான கனமழைக் கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகஸ்ட் 7 வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளது.
லக்னோ
பேருந்து - கார் மோதல் உ.பி.,யில் 7 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் உஸ்ராஹர் பகுதியில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஞாயிறன்று அதிகாலை ஸ்லீப்பர் கோச் பேருந்தும் (ஆம்னி) - காரும் நேருக்குநேர் மோதின. தவறான பாதையில் கார் வந்ததன் கார ணமாகவே இந்த விபத்து ஏற்பட்ட நிலை யில், காரில் இருந்த 3 பேரும், பேருந்தில் பயணித்த 4 பேர் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள னர். கார் உட்பட பேருந்தில் பயணித்த 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.
கார் ஓட்டுநர் தூங்கியதால்...
பேருந்தில் மோதிய கார் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு ஒரு பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில், கார் ஓட்டுநர் தூங்கி யதால் இந்த விபத்து ஏற்பட்டதாக எட்டாவா எஸ்.பி., சஞ்சய் குமார் செய்தி யாளர்கள் சந்திப்பில்,”லக்னோவில் இருந்து ஆக்ராவுக்குச் சென்று கொண்டி ருந்த கார் ஓட்டுநர் தூங்கியதன் காரண மாகவே இந்த கோர விபத்து நிகழ்ந்துள் ளது” என கூறியுள்ளார்.
வயநாடு
வயநாடு மக்களுக்கு அனைத்தையும் செய்வோம்
கேரள அமைச்சர்கள் உறுதி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வய நாடு மக்களுக்கு அனைத்தையும் செய்வோம் என கேரள அமைச்சர் கள் கல்பெட்டா நிவாரண முகாமில் உறுதி அளித்துள்ளனர்.
கல்பெட்டா எஸ்டிஎம் எல்பி பள்ளி யில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை கேரள தொழில்துறை அமைச் சர் பி.ராஜீவ் மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஓ.ஆ.கேளு ஆகியோர் ஞாயிறன்று பார்வையிட்டனர். முகாமில் இருந்தவர்கள் தங்கள் துயர நாளைப் பற்றிய நினைவுகளையும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களை இழந்த துயரங்களையும் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்ட னர். முகாமின் செயல்பாடுகள், உள்கட்ட மைப்பு மற்றும் தேவைகள் குறித்து அமைச் சர்கள் அதிகாரிகளிடம் பேசினர்.
தொடர்ந்து அமைச்சர் பி.ராஜீவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகை யில், “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வய நாடு மக்களுக்கு அனைத்தையும் செய் வோம். மறுவாழ்வு துரிதப்படுத்தப்படும்” என அவர் கூறினார். எஸ்டிஎம் எல்பி பள்ளியில் நடைபெறும் முகாமில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேர் உள்ள நிலையில், அவர்களில் 134 பேர் வெளி மாநில தொழிலாளர்கள் என்பது குறிப்பி டத்தக்கது.
புதுதில்லி
6 ஆண்டுகளில் தேசிய தேர்வு முகமைக்கு ரூ.448 கோடி லாபம்
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வை நடத் தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி கல்லா கட்டியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், “நுழைவுத்தேர்வுகளை நடத்த மாண வர்களிடம் தேசிய தேர்வு முகமை ரூ. 3,512.98 கோடியை வசூலித்துள்ளது. அதே நேரத்தில் தேர்வுகளை நடத்து வதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித் துள்ளத்து. இதன்மூலம் கடந்த 6 ஆண்டு களில் ரூ.448 கோடி லாபத்தைப் பெற்றுள் ளது. ஆனால் முறைகேட்டை தவிரக்க வும், தேர்வு முகமையின் திறன்களை உரு வாக்கவும், வினாத்தாள் ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்தவும் லாப தொகையில் இருந்து சிறிதளவு தொகை கூட பயன் படுத்தவில்லை. உயிரியல் அல்லாத பிர தமரின் அரசாங்கம் வருவாய் திரட்டும் நிறுவனமாக மாறியுள்ளது” எனக் குற் றம்சாட்டினார்.