india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுதில்லி, ஜன.29- நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத் தொடருக்கு முன்ன தாக, செவ்வாயன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு  விடுத்துள்ளார். 

பாஜகவோடு இனி எப்போதும் கூட்டணி இல்லை

சென்னை, ஜன.29- “தூக்கத்தில் எழுப்பி கேட்  டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே அதிமுக நிலைப்பாடு; கழட்டி விட்டது விட்டதுதான்; பாஜக-வுடன் எங்கள் கட்சிக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், “தமி ழக மக்களை ஏமாற்றி தமிழ கத்தில் காலூன்ற நினைக்  கும் பாஜகவின் எண்ணம்  பலிக்காது. நடக்காத விஷ யத்தைக் கூறி திசைத்திருப்ப அண்ணாமலை முயற்சிக்கி றார்” என்றும் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பிச்சைக்காரர் இல்லாத 30 நகரங்கள்

மோடி அரசு திட்டம்

புதுதில்லி, ஜன.29- மத ரீதியான, வரலாற்று  மற்றும் சுற்றுலா முக்கியத்து வம் வாய்ந்த 30 நகரங்களை,  2026-ஆம் ஆண்டுக்குள் பிச்  சைக்காரர்கள் இல்லாத நக ரங்களாக மாற்றப் போவ தாக மோடி அரசு கூறியுள்  ளது. இதற்காக, ஒரு செய லியை உருவாக்கி, பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. இது தொடர்பாக மதுரை, மைசூரு,  கோழிக்கோடு, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் ஏற் கெனவே ஆய்வு ஒன்று  நடத்தி முடிக்கப்பட்டு உள்ள தாக கூறப்படுகிறது.

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை!

நாகப்பட்டினம், ஜன.29- எல்லைத் தாண்டி மீன்  பிடித்ததாகக் கூறி, கடந்த ஜன வரி 14 அன்று நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை  இலங்கை கடற்படை கைது  செய்திருந்தது. இதைய டுத்து, யாழ்ப்பாணம் மீன வத் துறையினரின் கோரிக் கையை ஏற்று, நாகை மீன வர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்  துறை நீதிமன்றம் உத்தரவிட்  டுள்ளது. 

பொன்முடி மேல்முறையீடு
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, ஜன.29- வருமானத்திற்கு அதிக மாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட 3  ஆண்டு சிறைத் தண்டனை யை எதிர்த்து, தமிழக அமைச்சர் க. பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். திங்களன்று இந்த மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம்,  பொன்முடியின் மேல்முறை யீட்டு மனு மீது தமிழ்நாடு  லஞ்ச ஒழிப்புக் காவல்துறை  4 வாரங்களில் பதிலளிக்கு மாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை பதில் தாக்கல் செய்த  பின்பு பொன்முடியின் சிறைத்  தண்டனையை நிறுத்தி வைப்பது பற்றி பார்க்கலாம்  என்றும் தெரிவித்துள்ளது.